இலங்கையில் பெண்களை விட ஆண்களிடையே எய்ட்ஸ் பாதிப்பு ஏழு மடங்கு அதிகரிப்பு!



நாட்டில் ஆண்களிடையே எய்ட்ஸ் பாதிப்பு பெண்களை விட ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நோயாளர்கள்
2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் 25 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அந்த திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி விதான பத்திரன தெரிவித்துள்ளார்.

"கடந்த வருடத்தில் மொத்தம் 607 எய்ட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 44 சதவீதம் அதிகம்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை