பதுளை நமுனுகுல பூட்டா வத்தையில் இடம்பெற்ற வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது உயர் அழுத்த மின்கம்பியில் தேர் வண்டி மோதியதில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் ந (23 -08-2023) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்து பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நமுக்குள காவல்துறையினர் தெரிவித்தனர்.
(23-08-2023) ஆரம்பமான ரதம் பெரஹெரா நேற்று (24ம் திகதி) காலை வரை இடம்பெற்றதுடன், தேரை கோவிலுக்கு எடுத்துச் செல்லும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் டி.செல்வகுமார் (30), பி.ரமேஷ் (42) ஆகிய இருவரும் உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.