நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!



13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் புதன்னன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.


இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு பகிர்வது என்பது தொடர்பில் இந்த விசேட உரையின் போது ஜனாதிபதி தெளிவுபடுத்தவுள்ளார்.

இதேவேளை 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சித்தாலும் எதிர்க்கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும் இவ்விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வராமையானது ஜனாதிபதியின் அந்த முயற்சிகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
புதியது பழையவை