கிழக்கின் முதலாவது மகப்பேற்று வைத்திய நிபுணர் என்ற பெருமையினைக் கொண்ட வைத்தியர் சீ.தங்கவடிவேல் காலமானார்



கிழக்கு மாகாணத்தின் முதலாவது மகப்பேற்று வைத்திய நிபுணர் என்ற பெருமையினைக் கொண்ட வைத்தியர் சீ.தங்கவடிவேல் காலமானார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய கல்லாறை சேர்ந்த இவர் இலங்கையின் பல பாகங்களிலும் கடமையாற்றிய போதிலும் தனது பெருமளவான காலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்திய நிபுணராக கடமையாற்றியுள்ளார்.

கிழக்கு மாகாண மக்களினால் நேசிக்கப்பட்ட ஒருவராகவும், யுத்த காலத்தில் மிகவும் அர்ப்பணிப்பு மிக்க சேவையினையும் செய்து, ஓய்வுபெற்ற வைத்தியர் தங்கவடிவேல் அவர்கள் தனது 84 வயதில் காலமானார்.

இவரது பூதவுடலுக்கு மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
புதியது பழையவை