இஸ்ரேலில் காணாமல் போன இலங்கை இளைஞன்



இஸ்ரேலில் பணியாற்றிய இலங்கை இளைஞனை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பகுதியை சேர்ந்த மனோஜ் ஏகநாயக்க என்ற இளைஞனே தேடப்பட்டு வருகின்றார்.

அவர் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.


குறித்த இளைஞனின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவரைத் தேடிவருவாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் இளைஞன் தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
புதியது பழையவை