இலங்கையில் 31 நாட்களில் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் - 10 பேர் கர்ப்பம்



நாட்டில் கடந்த ஒக்டோபர் மாத்தில் மாத்திரம் 16 வயதுக்குட்பட்ட 131 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர இதனை தெரிவித்துள்ளார்.

இவர்களில் 10 பேர் தற்போது கர்ப்பமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை