கை,கால்கள் வெட்டப்பட்ட நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு!



வவுனியா, தரணிக்குளம், குறிசுட்டகுளம் பகுதியிலிருந்து இன்று (14 -11-2023) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தரணிக்குளம் குறிசுட்டகுளத்தின் நீரேந்துப் பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில்
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். 

குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.



இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை