மட்டக்களப்பு வாழைச்சேனை பிறந்துறைச்சேனைப் பகுதியில், வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை வேளை இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடாத்தப்பட்ட பகுதியில், போதைப்பொருள் வியாபாரம் இடம்பெற்று வருவதாகவும் இதன் காரணமாக எழுந்த
முரண்பாடுகளால் இத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.