மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!



மட்டக்களப்பு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற  15 வயதான சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.


நேற்று முன்தினம்(28-11-2023) ஆம் திகதி  நண்பர்களுடன் நீராடச்சென்ற செங்கலடியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.


இந்நிலையில் சிறுவனின் சடலம் நேற்று (29-11-2023)மாலை 7.00 மணியளவில் கடலில் மிதந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டு மட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை