ஜனவரி 1 முதல் அதிகரிக்கப்படும் தொலைபேசி கட்டணங்கள்



தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அனைத்து தொலைதொடர்பு சேவை வழங்கல் நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.

அதன்படி இந்த கட்டண உயர்வு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண விபரங்கள்
பெறுமதி சேர் வரி அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இதேவேளை புதிய கட்டண விபரங்கள் தத்தமது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடப்படும் என்றும் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் அறிவித்துள்ளனர்.
புதியது பழையவை