அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு



குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் புயலாக உருவாகும்.  .

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆபத்தானது.  எனவே, மீனவ மற்றும் கடற்படை சமூகங்கள் மறு அறிவித்தல் வரை மேற்படி கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகளுக்கு மீனவ மற்றும் கடற்படை சமூகம் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.


புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.


காற்றானது வடகிழக்கு திசையாக வீசுவதுடன் காலியிலிருந்து மட்டக்களப்பு வரை கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோ மீற்றர் வரை காணப்படும்.  மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (60-70) கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

தீவைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு அல்லது திசையில் மாறுபடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (20-30) கிலோமீற்றர்களாக காணப்படும்.


மன்னாரிலிருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புக்கள் கொந்தளிப்புடன் காணப்படும்.  நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
புதியது பழையவை