மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரனைச்
சந்தித்து, வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மறை மாவட்டம் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையை போசகராக கொண்டு மாவட்டத்தில் சமூக அபிவிருத்தி மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வரும்சிவில் சமூக அமைப்பினர், அமைப்பின் தலைவர் மாமாங்கராஜா தலைமையில் புதிய அரசாங்க அதிபரைச் சந்திந்தனர்.