வடக்கு - கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ஜனாதிபதி ரணில் இன்று சந்திப்பு!



ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21-12-2023) வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறும் என்று அழைப்புக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.


புதியது பழையவை