இன்றைய வானிலை முன்னறிவிப்பு!



கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் பொலநறுவை மாவட்டங்களிலும்  அடிக்கடி மழை பெய்யக்கூடும். 

வட மாகாண த்திலும் அத்துடன் அனுராதபுரம் மற்றும்  ஹமபாந்தோட்டை மாவட்டங்களிலும்  இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். 

சப்ரகமுவ மற்றும் மேல் 
மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரேலியா,  காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்  காணப்படுகின்றது. சில இடங்களில்  75 mm வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில்  காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கடல் பிராந்தியங்களில் 


திருகோணமலை  தொடக்கம் மட்டக்களப்பு, பொத்துவில்  ஊடாக ஹமபாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய  கடல் பிராந்தியங்களின் பல இடங்களில்  குறிப்பாக மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் வடகிழக்குத்  திசையில்  இருந்து  காற்று வீசும். 

கொழும்பு  தொடக்கம் மன்னார்,  காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை  வரையான அத்துடன் ஹமபாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான  கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 - 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

 கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
 சிரேஸ்ட  வானிலை அதிகாரி.
புதியது பழையவை