சீரற்ற காலநிலை - சில பாடசாலைகளுக்கு விடுமுறை



முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பாடசாலைகளுக்கு இன்று (19-12-2023) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3 பாடசாலைகளினதும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 5 பாடசாலைகளினதும் கற்பித்தல் செயற்பாடுகள் இன்றைய தினம் (19-12-2023) இடம் பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


சீரற்ற காலநிலை
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 1586 குடும்பங்களைச் சேர்ந்த 4806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 341 குடும்பங்களைச் சேர்ந்த 1039 பேர் 7 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள்
இந்தநிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 8 பாடசாலைகளை இடைத்தங்கல் முகாம்களாக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறான சூழலிலேயே குறித்த 8 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை