ஆசிரியர்களுக்கிடையில் மோதல்



வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில்  கற்பிக்கும் ஆசிரியர்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில்  கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களிற்கிடையில் இன்றையதினம் (21-12-2023)முரண்பாடு ஏற்பட்டுள்ளது.அது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் ஆசிரியர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

காவல்துறையினரின் விசாரணை
சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


இது தொடர்பாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக குழு ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை