பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பெருமளவு கொழுப்பு - இலங்கையில் சம்பவம்




இலங்கையின் சிறப்பு சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் ஆனந்த ஜெயவர்தன, லிபோசக்சன் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளார்.

கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாணந்துறையைச் சேர்ந்த 61 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் எவ்வித சிக்கல்களும் இன்றி இருப்பதாகவும் டொக்டர் ஜெயவர்தன தெரிவித்தார்.


அபாயங்கள் இருந்தபோதிலும், நாங்கள் 13.5 லீற்றர் கொழுப்பை வெற்றிகரமாக அகற்றினோம், இது மிகப் பெரிய அளவு.



அரிதான நிகழ்வு இது
சராசரியாக, 4 முதல் 5 லீற்றர்கள் இதேபோன்ற அறுவை சிகிச்சைகள் மூலம் உலகில் வேறு இடங்களில் அகற்றப்பட்டுள்ளன. இவ்வளவு கொழுப்பைக் கொண்ட அரிதான நிகழ்வு இது என்று அவர் மேலும் கூறினார்.
புதியது பழையவை