2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை!



இலங்கையில் புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ப்ரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை பெறுபேறுகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் அரச நிர்வாக அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் தகுதி பெற்ற சுமார் 4000 பேரை நேர்முகப் பரீட்சைக்காக அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமையினால் பல இடங்களில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன. 

அத்துடன் பணிபுரிந்த சிலர் ஓய்வு பெற்றுள்ளமையினாலும் இப்  பதவி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன” இவ்வாறு  ப்ரதீப் யசரத்ன  தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை