திருப்பழுகாமத்திற்கு ஒலிபெருக்கி தொகுதிக்கான நிதி ஒதுக்கீடு - பாராளுமன்ற உறுப்பபினர் கோ.கருணாகரம்



மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திற்கு  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா)  அவர்களது (DCB) பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி  ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்பட்டது.

நேற்று(21-02-2024) மட்/பட்/திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திற்கு  பாடசாலையினது நீண்டகால தேவைப்பாடாகிய ஒலிபெருக்கி தொகுதிக்கான கோரிக்கைக்கு அமைவாக  ரூபா( 0.4 million)மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சிபாரிசினை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினரின் ஒருங்கிணைப்பாளர் சு.உதயகுமார் ,போரதீவுப்பற்று பிரதேசசபையின் பழுகாமம் வட்டார முன்னால்  உறுப்பினர் சு.விக்கினேஸ்வைரன்  ஆகியோர் நேற்று (21-02-2024) திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் அதிபர் ,ஆசிரியர்களிடம் கையளித்தனர்.
புதியது பழையவை