போரதீவுப் பற்று பிரதேசத்தில் படையெடுத்துள்ள காட்டுயானைக் கூட்டம்




மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் உள்ள நவகிரி 38 கிராமத்தில் உள்ள வயல் பிரதேசத்தில் யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

குறித்த காட்டு யானைகள் இன்று(08-02-2024) ஆம் திகதி காலை வேளையிலேயே வருகை தந்துள்ளபோது நவகிரி பகுதிக்கு வருகை தந்த காட்டு யானைக் கூட்டத்தினால் மட்டக்களப்பில் இருந்து 38ஆம் கிராமம் நவகிரிக்கு வருகை தந்த இலங்கை போக்குவரது பஸ் யானைக் கூட்டம் வீதியை கடந்து செல்லும் வரைக்கு பஸ் தாமதித்து நின்று சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


அப்பகுதியில் தற்போது பெரும்போக வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற இந்நிலையில் இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கூட்டமாக மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரசேத்தின் அண்மித்ததாகவுள்ள சிறிய பற்றைக் காட்டுப்பகுதியில் இக்காட்டுயானைகள் தங்கியுள்ளததால் அப்பகுதியில் வேளாண்மை அறுவடை வேலைகளில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே செயற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

வெல்லாவெளி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு


வெல்லாவெளி, விவேகானந்த புரம்,பாலையடி வட்டை, நவகிரி பிரதேசமான,35,37,38, 39,40ஆம் கிராமங்கள் உள்ளிட்ட பல கிராமங்களை அண்மித்தாக இவ்வாறு கூட்டமாக நிற்கும் காட்டு யானைகளை அப்புறப்படுத்துவதற்கு வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராமவாசிகளௌ தெரிவிக்கின்றனர்.


மேலும் மிக நீண்ட காலமாக போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் உள்ள எல்லைக் கிராமங்களில் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் காட்டு யானைகளில் தொல்லைகளுக்கு மத்தியில் அப்பகுதி மக்கள் முகம்கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



புதியது பழையவை