கைத்துப்பாக்கியுடன் யுவதி ஒருவர் கைது!



இயங்கும் நிலையில் உள்ள கைத்துப்பாக்கியுடன் 22 யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி, இக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த யுவதியே இவ்வாறு பொலிஸரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தில் பணியாற்றிய யுவதியின் மூத்த சகோதரன், கடந்த வருடம் இராணுவத்தில் இருந்து விலகி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைத்துப்பாக்கியுடன் யுவதி கைதானபோது அவரிடமிருந்து 5 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.


இந்த யுவதி திட்டமிட்ட குற்றச் செயல்கள் வலையமைப்புடன் தொடர்புபட்டவரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை