மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்




மூதூரில் வீடொன்றில் நேற்று காலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரே கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.


சந்தேக நபரான 33 வயதுடைய கணவர் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை