மட்டக்களப்பில் வெடுக்குநாறி மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!



வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தினத்தன்று நடைபெற்ற பொலிஸாரின் கடும் அத்துமீறிய செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த ஆர்ப்பாட்டமானது, இன்று (10-03-2024) மட்டக்களப்பு - காந்தி பூங்காவிற்கு முன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பொலிஸாரின் அராஜகம் 

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்ததுடன் மேலும், கடும் அடக்குமுறையினை பிரயோகித்திருந்தனர்.


இந்நிலையில், சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று நேற்று உத்தரவிட்டுள்ளது.

இதனை கண்டிக்கும் முகமாகவே மட்டக்களப்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, “எங்கள் மண்ணில் எங்கள், மலையில் உங்களுக்கு உரிமையில்லை, சிவராத்திரி நாளிலும் சிங்கள அடக்குமுறை ” போன்ற பதாதைகள் ஏந்தியவாறு தமிழ் தேசிய கட்சி உணர்வாளர்கள், சிவில் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.



புதியது பழையவை