இன்றைய வானிலை முன்னறிவிப்பு!



வடக்கு,வடமத்திய,வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன்,மொனராகலை, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை  மாவட்டங்களிலும்  இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். 

காலி, மாத்தறை,களுத்துறை மற்றும் இரத்தினபுரி  மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய  மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.  

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில்  வறட்சியான  வானிலை நிலவக்கூடும். 

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமத்திய  மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். 

கடல் பிராந்தியங்களில் 


நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில்  சீரான வானிலை காணப்படும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் காங்கேசன்துறை  தொடக்கம் திருகோணமலை, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் கிழக்கு அல்லது வடகிழக்குத் திசையில் இருந்தும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மாறுபட்ட திசைகளில் இருந்தும் காற்று வீசும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட  வானிலை அதிகாரி.
புதியது பழையவை