மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கல்லடி தரிசனம் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றில் 17 ஆமைகளையும் வெட்டப்பட்ட ஆமை இறைச்சியையும் தன் வசம்வைத்திருந்த இருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.