நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு முக்கிய சட்டமூலங்கள்



நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய சட்டமூலங்களை இன்று (22-05-2024) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.

"பொருளாதார மாற்ற யோசனை" மற்றும் "பொது நிதி மேலாண்மை யோசனை" என்பனவே அவையாகும்.

பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் எதிர்கால பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவும் இந்த யோசனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டுத் திட்டத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன என்றும் செஹான் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை