தமிழர்களின் வலிகளை சுமந்த ஊழி திரைப்பட பாடல் வெளியீடு!



யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்களின் வாழ்வின் இருண்ட யுகங்களை பற்றி பேசும் ஊழி திரைப்படத்தின் பாடல் வெளியீடானது தமிழ்த் தேசிய கலை இலக்கிய பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த நிகழ்வானது, நேற்றைய தினம் (08-05-2024) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.  

காணாமல் ஆக்கப்பட்டோரின் வலிகளை சுமந்த குறித்த திரைப்படம் எதிர்வரும் மே 10ஆம் திகதி 16 நாடுகளில் 70 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

போருக்குப் பின்னரான இருண்ட காலத்தை பேசும் ஊழி திரைப்படம்
போருக்குப் பின்னரான இருண்ட காலத்தை பேசும் ஊழி திரைப்படம்
திரைப்பட வெளியீடு 
மேலும், இந்த திரைப்படமானது ஜோசப் ரஞ்சித்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ளது. 


அதேவேளை, ஈழத்து கவிஞர் தீபச்செல்வனின் கவி வரிகளில் உருவான பாடலுக்கு  இந்திய பாடகர்களின் குரலிற்கு புதிய இசையமைப்பாளர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், பாடல் இறுவெட்டினை ஈழப்பாடகி பார்வதி சிவபாதம் மற்றும் ஈழ இசையமைப்பாளர் செயல்வீரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்துள்ளனர்.


இதனை தொடர்ந்து, நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் மற்றும் பாடல் ஆசிரியர் தீபச்செல்வன் உள்ளிட்ட கலைஞர்கள் பலரும் அனுபவ உரையாற்றினர்.

மேலும், முன்னாள் வடமாகாண சபை கல்வி அமைச்சர், முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும்  கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


புதியது பழையவை