புத்தளத்தில் hair dryer உபயோகிக்கையில் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் என்பவரே இன்று (30-05-2024) உயிரிழந்துள்ளார்.
hair dryer மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே மாணவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளாகியுளார். இதனையடுத்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாணவர் உயிர்ழந்துள்ளார்.
இந்நிலையில் மாணவனின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.