நாட்டில் பலத்த காற்று வீசக்கூடும் - முன்னெச்சரிக்கை



நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று () முதல் அடுத்த சில நாட்களில் ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

கனடாவில் சடுதியாக அதிகரித்துள்ள வீட்டு வாடகைத் தொகை
கனடாவில் சடுதியாக அதிகரித்துள்ள வீட்டு வாடகைத் தொகை
பலத்த காற்று வீசக்கூடும்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை | Today Srilanka Weather Report

பல தடவைகள் மழை பெய்யும்
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும்.


ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதியது பழையவை