சம்பள நிலுவையினை வலியுறுத்தி நாளைய தினம் அதிபர்கள்,ஆசிரியர்கள் போராட்டத்தில்!



சம்பள நிலுவையினை வலியுறுத்தி நாளைய தினம் அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும்
ஆதரவு வழங்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊடக சந்திப்பு நேற்று மாலை மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. 

இந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் கலந்துகொண்டு கருத்துகளை
முன்வைத்தார்.
புதியது பழையவை