பாதையாத்திரை செல்லும் அடியார்களுக்காக "விறிலியன்ற்" விளையாட்டுக் கழகத்தினால் தாகசாந்தி நிகழ்வு!



மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய பாதையாத்திரை செல்லும் அடியார்களுக்காக போரதீவுப்பற்று  திருப்பழுகாமம் "விறிலியன்ற்" விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாகசாந்தி நிகழ்வான சிறப்பான முறையில் இடம் பெறுகின்றனர்.


தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் இன்று(21-07-2024) இறுதிநாள் உற்சவமாகும் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் இருந்து அதிகலவான அடியார்கள்  பாதையாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.


கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமாக கருதப்படும்  தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவமானது(01-07-2024) ஆம் திகதி ஆரம்பமாகி 21நாட்கள் திருவிழாக்கள் இடம் பெற்று நாளை (22-07-2024)ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும்.


புதியது பழையவை