திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாளினை அனுஸ்டிப்பதற்காக துயிலுமில்லத்தினைச் சுத்தம் செய்து தயார்ப்படுத்திக் கொள்வதற்கான முதலாவது சிரம தான நிகழ்வு இன்றைய தினம் (16-11-2024) நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் ஒழுங்கமைப்பட்டிருந்தது.
இச்சிரம தான நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர்கள் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் மற்றும் ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர்.
தொடர்ச்சியாக எதிர்வரும் 24ஆம் திகதிவரை நினைவேந்தலுக்காக துயிலுமில்லத்தைத் தயார்ப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையினால் அனைவரையும் இப்பணியில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு தெரிவித்தனர்.