கொழும்பு - ராஜகிரியவில் அமைந்துள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையமொன்றில் இன்று(01-11-2024) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்திற்கான காரணம்
தீயை அணைப்பதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும், இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.