மட்டக்களப்பு தாந்தாமலை வீதியூடாக வழிமாறி பயணித்த பால் வவுசர் திடீரென வீதி தாழிறங்கியதால் வசமாக சிக்கிக்கொண்டது. இச் சம்பவம் நேற்றிரவு 9மணியளவில் இடம்பெற்றுள்ளது.
9000ம் லீற்றர் பாலினை சுமந்தபடி பயணித்த பவுசரை செலுத்திச் சென்ற சாரதி வழிமாறி தாந்தாமலை பகுதிக்கு சென்று இப் பாதையூடாக பயணித்திருக்கிறார்.
அண்மையில் இப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் குறித்த வீதியின் கீழால் மண்ணரிப்பு ஏற்பட்ட நிலையில் வீதி ஸ்திரமற்ற நிலையில் காணப்பட்டுள்ளது இதனால் அதிக சுமையுடன் பயணித்த வவுசரின் பின் பகுதி வீதியை உடைத்துக்கொண்டு கீழிறங்கியுள்ளது.