தமிழ்த்தேசிய கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக 83, சிவில் அமைப்புகள், 7, தமிழ்த்தேசியகட்சிகள், அனைத்து புலம்பெயர் அமைப்புகளும், யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, முன்னாள் போராளிகள், தமிழ் மக்கள் எல்லோரும் என்னை தமிழ் தேசிய கொள்கையின் அடிப்படையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக நிறுத்தி அந்த கொள்கைக்காக 226343, வாக்குகளை பெற்று தமிழ் தேசிய உறுதிப்பாட்டை நிருபித்தேன் ஆனால் என்னை (28/12/2024) ஆம் திகதி தமிழரசுக்கட்சி மத்தியகுழு கூட்டத்தில் கட்சியில் இருந்து விலக்கியதாக சுமந்திரன் கூறுகிறார்.
அப்படியானால் தமிழரசுகட்சி தமிழ்தேசிய கொள்கைக்கு எதிரான கட்சி என்பதை நிருபித்துள்ளனர்.
எனவே இதையிட்டு தமிழ் பொதுவேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் ஆதரித்து இரவு பகலாக பிரசாரம் செய்த புலம்பெயர் உறவுகள், அமைப்புகள் இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
தமிழ்தேசிய கொள்கைக்காக ஒட்டுமொத்த தமிழ்தேசிய அமைப்புகள் எடுத்த முடிவும், அந்த முடிவுக்காக தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட நான் துரோகியா?
சகல புலம்பெயர் உறவுகளிடம் இருந்து உங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.
பா.அரியநேத்திரன்
28/12/2024
வக்சப் 0773277774