மட்டக்களப்பில் வேகக்கட்டுப்பாட்டடை இழந்து குடைசாய்ந்த மீன் ஏற்றிவந்த லொறி



திருகோணமலை நிலாவெளியிலிருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு கல்முனை நோக்கி மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியூடாக பயணித்த சிறியரக லொறி இன்று (03-12-2024)ஆம் திகதி  மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியூடாக பயணித்த சந்தர்ப்பத்தில் சாரதியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ் விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் பதிவாகியுள்ளது. 

இவ் விபத்தின்போது லொறியில் பயணித்தோருக்கு சிறு காயம் ஏற்ப்பட்டுள்ளதுடன்  விபத்தின் போது லொறிக்கும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது. 

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை