மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மகிழூர் பிரதேசத்தை சேர்ந்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்டுள்ளார்.
சிவகுமார் பிலோமிகா என்ற 17 வயது மாணவியே வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டார்.
பிரேத பரிசோதனைகளுக்கு பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.