இலங்கையின் மூத்த பாடகர் காலமானார்!



இலங்கையின் மூத்த பாடகர் பிரிய சூரியசேன இன்று அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.

அவரது இறுதிச் சடங்குகள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1944 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி பிறந்த பிரிய சூரியசேன தனது கவிஞர் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் திறமையான உள்ளூர் பாடகராக அங்கீகாரம் பெற்றவர்.

1970 களில் அவரது முதல் நான்கு பாடல்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (SLBC) மூலம் ஒலிபரப்பப்பட்டு அவருக்கு உடனடிப் புகழைப் பெற்றுத் தந்தபோது அவரது தொழில் வாழ்க்கை உயர்ந்தது.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, சூரியசேன இலங்கையின் இசையில் ஒரு பிரியமான நபராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை