2025ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை இன்று ஆரம்பம்!



2025 ஆம் ஆண்டிற்கான புதிய பாடசாலை தவணை இன்று (27-01-2025) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் தவணை மூன்று கட்டங்களாக நடைபெறும்.

அதன்படி, இன்று முதல் எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நடைபெறும்.

முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலும் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 9 ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை