மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலய ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார்
அ.த.க.பாடசாலையின்
அதிபர் த.சேரலாதன் தலைமையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் நேற்று(24-01-2025)ஆம் திகதி கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்ட கிராமத்தில் அமையப்பெற்ற பாடசாலையானது மிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் காணப்படும் அதிகஸ்ட பாடசாலையாகும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் மாணவர்களின் குடும்பநிலை பொருளாதாரம் மிகவும் பின்தங்கியதாக காணப்படுவதோடு இப் பாடசாலையில் பல அடிப்படைத் தேவைகள் காணப்படுகின்றன.