கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் - குடும்பஸ்தர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!



மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை  பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் இன்று(18-01-2025) காலை மின்சாரம் தாக்கி 24 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மேசன்  வேலை செய்துகொண்டிருந்த குறித்த இளைஞன் மின் இணைப்பை பேற முயற்சி செய்த சமயம் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

மேசன் கூலித்தொழிலாளியான இவர் 2 பிள்ளைகளின் தந்தையாவார். இவரது பரிதாபகரமான மரணம் அக் கிராமத்தில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

தற்போது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை