மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா



இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய பொங்கல் விழா மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (18-01-2025) சனிக்கிழமை கொட்டும் மழையில் சாரணர் சங்க மட்டு கிளையின் ஏற்பாட்டில் கோலாகலமாக இடம்பெற்றது.

குறித்த பொங்கல் விழாநிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன், அதிதிகளாக இலங்கை சாணர் சங்க மட்டக்கள்பு தலைவர் வை.ஜெயசந்திரன், சாரணர் பயிற்சிப்பாளா தினேஷ் மானவடு, மண்முணைவடக்கு பிரதேச செயலாளர் திருமதி வில்வரத்தினம், மட்க்களப்பு மாநகர சபை ஆணையானர் என.தனஞ்சயன், உள்ளுராட்சி பிரதி ஆணையாளர் எஸ்.பிரதீபன், மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதில் பொதுமக்கள் சாரணயர்கள் உட்பட பெரும் திரளானேர் கலந்து கொண்டு  சம்பிராய பூர்வமாக பாரம்பரிய முறையில் பொங்கல் விழா ஆரம்பித்ததுடன்  கலாச்சார நடனங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை