மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!




மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (17-01-2025) மாலை மேற்படி இருவரும் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.

ஓட்டமாவடியைச் சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை