நாளை மட்டக்களப்பில் நீர் வெட்டு-தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினுடைய அறிவித்தல்!



மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரதான நீர் சேமிப்பு தொட்டியினுடைய சுத்தப்படுத்துதல் நடவடிக்கை காரணமாக நாளை (08-02- 2025)ஆம் திகதி அன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதனால் மண்முனை வடக்கு, காத்தான்குடி, மண்முனைப்பற்று, ஏறாவூர், ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று (வாழைச்சேனை), கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட நீரப்பாவனையாளர்களிற்கு நீர் வழங்குதல் தடைப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஆகவே வழங்கப்படும் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து தங்கள் பாவனைக்கு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
புதியது பழையவை