திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் உள்ள மின் பிறப்பாக்கியில் உள்ள செப்பு கம்பியை இன்று (13-03-2025) அதிகாலை வெட்டி திருட முயற்சித்தபோது மின்சாரம் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அண்மைக்காலமாக மின் பிறப்பாக்கிகளில் உள்ள செப்பு கம்பிகள் திருடப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.