இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!



இவ்வருடத்தின் கடந்த 112 நாட்களில் நடைபெற்ற 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 23 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலகக்கும்பல்களின் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ளன.

ஏனைய 14 சம்பவங்கள் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் திணைக்கள அறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
புதியது பழையவை