உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 413 முறைப்பாடுகள் பதிவு!



எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி ) 413 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 02 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 382 முறைப்பாடுகளும் ஏனைய விடங்கள் தொடர்பில் 28 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை