மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் உற்பத்தி விற்பனையாளர்களின் இரு தினங்கள் இன்று(10-04-2025)நாளை (11-04-2025) ஆகிய இரு நாட்கள் சந்தை மற்றும் கண்காட்சி நிகழ்வானது இடம்பெறும்.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இன்று (19-04-2025)ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசபை பாலையடிவட்டை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் கலந்து கொண்டிருந்ததுடன், விசேட அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு, போரதீவுப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திரு. வி. துலாஞ்சனன் சிறப்பு அதிதியாக போரதீவுப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.பகீரதன் அவர்களும் கலந்து கொண்டனர்.
தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், நுகர்வோர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை சலுகை விலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கு இக் கண்காட்சி மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் போது பிரதேச செயலக பிரிவின் மண்டூர், பழுகாமம் மற்றும் வெல்லாவெளி வலயங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு அருணலு நுகர்வு கடன் மற்றும் வாழ்வாதார கடன் என்பன வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வினை பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு. எஸ். ஜெயராஜா, முகாமைத்துவ பணிப்பளார் திரு. அ. குககுமாரன், மண்டூர், பழுகாமம், வெல்லாவெளி சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள், சமுர்த்தி வர்த்தக சங்கத்தினர், விற்பனையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லாத போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு சொந்தமான பாலையடிவட்டை பொதுச் சந்தை வளாகத்தில் இடம்பெற்றதுடன் குறித்த சந்தை மீளவும் இயங்கு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.