நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா ஆகியோரின் சந்திப்புக்கு சந்திவெளி பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான காணொளியொன்று வெளியாகியுள்ளது.
அதன்போது, சாணக்கியனின் மட்டக்களப்பு - சந்திவெளி அலுவலகத்திற்கு முன்னால் சுடான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், அங்கு ஹிஸ்புல்லா சட்டத்தரணி ஒருவரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும், இந்த சந்திப்பை சாணக்கியன் ஏற்பாடு செய்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.