சிகிரியாவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு.!

சிகிரிய பொலிஸ்பிரிவில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி நேற்று (08.11.2025)ஆம் திகதி  ஐந்து வயது சிறுவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். 

களனி பகுதியின் வடலுகமவில் வசித்து வந்த சிறுவன் தனது பெற்றோருடன் நீச்சல் தடாகத்தில் இறக்கும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

விபத்து குறித்து சிகிரிய போலீசார் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த குழந்தையின் உடல் தற்போது தம்புள்ளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, மரணத்திற்குப் பிந்தைய விசாரணைக்குப் பிறகு மேலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.

 இந்த துயர சம்பவம் பெற்றோர்களும் ஹோட்டல் நிர்வாகமும் குளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பில் கடுமையான கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகும்.

புதியது பழையவை